மறைந்த முன்னால் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பங்களாவில் திடீர் தீவிபத்து!

காஞ்சிபுரம் மாவட்டம் சிறுதாவூரில் மறைந்த முன்னால் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு சொந்தமான பங்களா ஓன்று உள்ளது .

அப்போது அவர் முதல்வராக இருந்தபோது சிறுதாவூரில் உள்ள பங்களாவிற்கு அடிக்கடி சென்று ஒய்வு எடுப்பார்.எனவே ஜெயலலிதா மறைவிற்கு பின்னர் சிறுதாவூரில் உள்ள பங்களா மூடியே இருந்தது.

இந்நிலையில் நேற்று சிறுதாவூரில் உள்ள பங்களாவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.தகவலை அறிந்து அருகில் இருந்து வந்த தீயணைப்பு படையினர் 5 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் இந்த தீயை கட்டுப்படுத்தினர்.பல ஏக்கர் நிலங்கள் தீக்கு இரையாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து போலீஸ் விசாரணை நடத்தி வருவதாகவும்,இதற்கு காரணம் சமூக விரோதிகள்தான் என்று தெரிவித்துள்ளனர்.

Leave a Comment