பெண் பத்திரிகையாளர் மீது மும்பையில் கடும் தாக்குதல்!

பெண் பத்திரிகையாளர் ஒருவர்  மும்பையில் ஷேர் கால் டாக்சியில் பயணித்த போது சக பெண் பயணி அவரை கடுமையாக தாக்கியதாக அந்தப்  பத்திரிகையாளர் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்,தலைமுடியைப் பிடித்தும் முகத்தில் கீறியும் காயங்களை ஏற்படுத்தியதாக பாதிக்கப்பட்ட பெண் உஷ்னோடா பால் ( ushnota paul ) தெரிவித்துள்ளார்.

உபர் கால் டாக்சியை  கொட்டும் மழையில் வீடு திரும்புவதற்காக பதிவு செய்து காத்திருந்த போது 35 வயதான சக பெண் பயணியுடன் காரை பகிர்ந்துக் கொண்டதாகவும், கட்டணத்தை பகிர்ந்துகொள்வதில் ஏற்பட்ட தகராறில் வெறித்தனமான தாக்குதல் நடத்தப்பட்டதாக உஷ்னோடா பட்டேல் தெரிவித்துள்ளார்.

Leave a Comment