புனேவில் வன்முறையை கட்டவிழ்த்து விட்ட மதவாத சக்திகள்…!

மராட்டிய மாநிலம் புனே அருகே உள்ள ” *பீமா கோரேகான்”* போர் நினைவுசின்னம் 200வது ஆண்டு அனுசரிப்பு நிகழ்ச்சி நேற்று நடைப்பெற்றது.இந்நிகழ்வில் பிரகாஷ் அம்பேத்கர், ஜிக்னேஷ் மேவானி போன்ற தலித் தலைவர்கள் பங்கேற்று பாஜக தலைவர்களின் அரசியலமைப்பு மாற்றம் குறித்த கருத்துக்களை எதிர்த்து தங்களது கருத்துக்களை பதிவிட்டனர்.

இந்நிலையில், இதனை பொறுத்துகொள்ள முடியாத ஆளும் மதவாத சக்திகள் இன்று 01-01-2018 வன்முறையை கட்டவிழ்த்து விட்டுள்ளனர். பொது சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. பல வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டுள்ளன. தற்போது அங்கு 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது..

author avatar
Dinasuvadu desk

Leave a Comment