டெல்லி அணியை வீழ்த்தி ராஞ்சி கோப்பையை வென்றது விதர்பா அணி!

ராஞ்சி கிரிக்கெட் கோப்பை இறுதிப்போட்டியில், டெல்லி அணியை வீழ்த்தி, முதல்முறையாக விதர்பா அணி வெற்றிக்கோப்பையை கைப்பற்றியது.  டாஸ் வென்ற விதர்பா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. பேட் செய்த டெல்லி அணி 295 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. தொடர்ந்து விளையாடிய விதர்பா அணி முதல் இன்னிங்சில் 547 ரன்களை குவித்தது.
2-ஆவது இன்னிங்சில் டெல்லி அணி 280 ரன்கள் எடுத்தது. 29 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கில் களம் கண்ட விதர்பா அணி, ஒரு விக்கெட் இழப்புக்கு 32 ரன்களை எடுத்து ரஞ்சிக் கோப்பையைக் வென்றது. அந்த அணியின் ரஜ்னீஷ் குர்பானி  ஆட்ட நாயகனாக அறிவிக்கப்பட்டார்.
source: dinasuvadu.com

Leave a Comment