காங்கிரஸ் மூத்த தலைவர் ரண்தீப் சிங் சுரஜேவாலா பாஜக எம்.பிக்கள் உண்ணாவிரதம் இருப்பதாக அறிவித்த நிலையில் பிரதமர் மோடி சென்னையில் சாப்பிட்ட பின் உண்ணாவிரதம் இருந்தது எப்படி? என கேள்வி எழுப்பியுள்ளார். பாஜகவினர் போலி உண்ணாவிரதம் இருந்து மக்களை ஏமாற்றியுள்ளதாகவும் அவர் சாடியுள்ளார்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் வீணடிக்கப்பட்டதை கண்டித்து பிரதமர் மோடி, அமித் ஷா உட்பட பாஜக எம்.பிக்கள் இன்று உண்ணாவிரதம் இருப்பதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி, பல பகுதிகளிலும் பாஜக எம்.பிக்கள் இன்று உண்ணா விரதம் இருந்தனர். ஆனால் உண்ணாவிரதம் என அறிவித்த விட்டு பிரதமர் மோடியும், பாஜக தலைவர் அமித் ஷாவும் சாப்பிட்டதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.