நடிகர் ரஜினிகாந்த் ‘‘அறைக்குள் அரசியல் நடத்தும் ஆன்மிக ஞானி’….!

மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் அறைக்குள் அரசியல் நடத்தும் ஆன்மிக ஞானி நடிகர் ரஜினி என  விமர்சித்துள்ளார்.

சென்னை பட்டினப்பாக்கத்தில் இன்று (வியாழக்கிழமை) செய்தியாளர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்து பேசிய அமைச்சர் ஜெயக்குமார்,

“உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்கும் என நம்புகிறோம். அதற்காக நாடாளுமன்றத்தில் அதிமுக உறுப்பினர்கள் தொடர்ந்து அழுத்தம் தருகின்றனர். உச்சநீதிமன்றம் வழங்கிய 6 மாத கால அவகாசம் இன்னும் முடியவில்லை. காவிரி விவகாரத்தில் யூகங்களுக்கெல்லாம் பதிலளிக்க முடியாது.

பாஜகவுடன் அதிமுக ஆதரவும் இல்லை, கூட்டணியும் இல்லை என முதல்வர் தெளிவாக கூறியிருக்கிறார். குடும்ப சூழ்நிலை, தனிப்பட்ட பிரச்சனைகள் காரணமாகவே காவலர்கள் தற்கொலை செய்துகொள்கின்றனர்.

உரிய நேரத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும் என்பதுதான் தமிழக அரசின் எண்ணம். ஆனால், உள்ளாட்சி அமைப்பு எல்லை வரையறை பணிகள் இன்னும் முடியவில்லை. அதுதொடர்பான வழக்கில் தீர்ப்பு வந்ததும் உள்ளாட்சி தேர்தல் உடனடியாக நடத்தப்படும். அறைக்குள் அரசியல் நடத்தும் ஆன்மிக ஞானியாக நடிகர் ரஜினி இருக்கிறார் ”என மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார்  தெரிவித்தார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment