துப்பாக்கி தோட்டாக்கள் சென்னை வந்த எக்ஸ்பிரஸ் ரயிலில் கண்டெடுப்பு!

3 துப்பாக்கி தோட்டாக்களை திருவனந்தபுரத்திலிருந்து சென்னை வந்த எக்ஸ்பிரஸ் ரயிலில்,  ரயில்வே போலீசார் கண்டெடுத்துள்ளனர். இன்று காலை சென்னை சென்ட்ரல் நிலையம் வந்து சேர்ந்த அந்த எக்ஸ்பிரஸ் ரயிலில், ரயில்வே ஊழியர்கள் வழக்கம்போல துப்புரவுப் பணிகளை மேற்கொண்டனர். அப்போது ஏசி வசதி கொண்ட பி2 பெட்டி, படுக்கை எண் எட்டில், சிறிய பௌச் கிடந்ததைக் கண்டனர்.

அதை திறந்தபோது, 3 துப்பாக்கி தோட்டாக்கள் இருந்ததைப் பார்த்து அதிர்ந்த அவர்கள், நடைமேடை பொறுப்பாளரிடம் ஒப்படைத்தனர். பின்னர் சென்ட்ரல் ரயில்வே போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்ட தோட்டாக்கள், எஸ் எல் ஆர் ரக துப்பாக்கியின் 7.62 எம்.எம். தோட்டாக்கள் என தெரியவந்தது.
இதையடுத்து பி2 பெட்டியில் முன்பதிவு செய்து பயணித்தவர்களின் பட்டியலைக் கொண்டு, துப்பாக்கி தோட்டா குறித்து விசாரணை நடத்த அவர்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment