துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்தவர்களுக்கு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் ஓபிஎஸ் நேரில் ஆறுதல் !

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்,தூத்துக்குடியில் கலவரத்தின் போது காயம் அடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களை  நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி அப்பகுதி மக்கள் தொடர் போராட்டங்களை நடத்தினார்கள். இந்நிலையில் 100வது நாள் போராட்டமான கடந்த 22ந் தேதி கலெக்டர் அலுவலகம் நோக்கி பேரணியாகச் சென்றனர். ஆனால் பேரணி வன்முறையாக மாறியதால் போலீசார் தடியடி மற்றும் துப்பாக்கிச்சூடு நடத்தினார்கள். இதில் 13 பேர் பலியாகியுள்ளனர். பலர் காயமடைந்தனர். 150-க்கும் மேற்பட்டோர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்களில் முதலில் 65 பேரும், பின்பு 74 பேரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். தொடர்ந்து தூத்துக்குடியில் பதட்ட நிலை நீடித்து வந்தது. 21ந் தேதி அன்றிலிருந்து 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது.

தற்போது பதட்டம் குறைந்ததன் காரணமாக, நேற்று காலை 8 மணியுடன் 144 தடை உத்தரவு வாபஸ் பெறப்பட்டது. இந்நிலையில் அமைச்சர் கடம்பூர் ராஜூ, தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

இதனைத்தொடர்ந்து துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் இன்று தூத்துக்குடி சென்றார். அங்கு துப்பாக்கி சூடு, தடியடியில் காயம் அடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துடன் அமைச்சர்கள் ஜெயக்குமார், கடம்பூர் ராஜூ நேரில் ஆறுதல் தெரிவித்தனர்.

மேலும்  செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Recent Posts

சூரியை ஹீரோவா நடிக்க சொன்னது நான் தான்! மேடையில் உண்மையை உடைத்த சிவகார்த்திகேயன்!

சென்னை : சூரியை ஹீரோவாக நடிக்க சொன்ன முதல் ஆள் நான்தான் என நடிகர் சிவகார்த்திகேயன் கூறியுள்ளார். காமெடி கதாபாத்திரங்களில் மட்டும் நடித்து கலக்கி வந்த நடிகர்…

7 mins ago

சீரகத் தண்ணீர் குடிப்பதால் நம் உடலில் ஏற்படும் மாயாஜாலங்களை தெரிஞ்சுக்கோங்க.!

Cumin seed -சீரகத் தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் ஆரோக்கிய நன்மைகளைப் பற்றி பதிவில் காணலாம். சீரகத்தை தண்ணீரில்  கொதிக்க வைத்தோ அல்லது ஊற வைத்தோ குடித்தாலும் ஒரே…

11 mins ago

வங்கக்கடலில் நாளை உருவாகிறது காற்றழுத்த தாழ்வுப்பகுதி – வானிலை ஆய்வு மையம்.!

சென்னை: நாளை வங்ககடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகிறது என்பதால், தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்து. தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல…

58 mins ago

இன்று ப்ரோமோ நாளை முழு பாடல்.. ‘இந்தியன் 2’ படத்தின் முதல் சிங்கிள் அப்டேட்!

சென்னை: இந்தியன் 2 படத்தின் முதல் பாடலின் ப்ரோமோ வீடியோ இன்று மாலை 5 மணிக்கு வெளியாகிறது. நடிகர் கமல்ஹாசன் நடித்துள்ள ‘இந்தியன் 2’ படத்தின் முதல்…

2 hours ago

தமிழர்கள் மீது இத்தனை காழ்ப்பும்,வெறுப்பும் ஏன்.? பிரதமர் மோடி பேச்சுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!

சென்னை : வாக்குகளுக்காக தமிழர்களை இழிவுபடுத்த வேண்டாம் பிரதமர் மோடிக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம். ஒடிசா மாநிலத்தில் (மே20) நடந்த பிரச்சார கூட்டத்தில் கலந்துகொண்டபோது பிரதமர்…

2 hours ago

ட்விட்டரை விட இன்ஸ்டாகிராம் தான் எனக்கு பிடிக்கும் ! மனம் திறந்த ‘தல’ தோனி !!

சென்னை : சென்னை அணியின் முன்னாள் கேப்டனான எம்.எஸ்.தோனி தனக்கு ட்விட்டரை விட இன்ஸ்டாகிராம் தான் புடிக்கும் என கூறி உள்ளார். ஐபிஎல் தொடரில் இந்த முறை…

2 hours ago