தருமபுரியில் வெள்ள அபாய எச்சரிக்கை!பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தல் ..!

வெள்ள அபாய எச்சரிக்கை  தருமபுரியில் உள்ள  ஒகேனக்கல், காவிரி ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்களுக்கு விடப்பட்டுள்ளது என்று அமைச்சர் அன்பழகன்  தெரிவித்துள்ளார் .மேலும்  தாழ்வான பகுதிகளில் வசிப்போர் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளார் .

இதேபோல்  விநாடிக்கு 60 ஆயிரம் கன அடி உபரி நீர் கர்நாடகாவின் கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து திறக்கப்பட்டுள்ளது.மேலும் கபினி அணையில் இருந்து காவிரி ஆற்றில் விநாடிக்கு 40,000 கன அடி உபரி நீர் வெளியேறி வருகின்றது.கே.ஆர்.எஸ், கபினி அணைகள் முழு கொள்ளளவை எட்டிய நிலையில் உபரிநீர் திறக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது .

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment