தஞ்சை மாவட்டம் கதிராமங்கலத்தில் நில அளவையில் ஈடுபட்டிருந்த 4 பேர் சிறைபிடிப்பு!!

போராட்டக் குழுவினர் ,கதிராமங்கலத்தில் நில அளவையில் ஈடுபட்டிருந்த வடமாநிலத்தை சேர்ந்த 4 பேரை,  சிறைபிடித்தனர்.

தஞ்சை மாவட்டம் கதிராமங்கலத்தில் 306-வது நாளாக ஓஎன்ஜிசிக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் ஓஎன்ஜிசி குழாய் உடைப்பு ஏற்பட்ட இடத்தில், நில அளவையில் ஈடுபட்டிருந்த 4 பேரை போராட்டக்குழுவினர் சிறைபிடித்தனர்.

தகவலறிந்து வந்த போலீசார், அவர்களிடம் விசாரணை நடத்தியதில், சாலை அகலப்படுத்தும் பணிக்கான ஆய்வு மேற்கொண்டதாக தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து 4 பேரையும் அழைத்து சென்ற போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment