சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த முதியவர் கைது..!

பொது சுகாதார வளாகத்திற்கு சென்ற 11 வயது சிறுமியை  ஓமலூர் அருகே பாலியல் வன்கொடுமை செய்த முதியவர் கைது செய்யப்பட்டார்.

சேலம் மாவட்டம் தாரமங்கலம் பகுதியைச் சேர்ந்த 11 வயது சிறுமி தன் வீட்டின் அருகே உள்ள பொது சுகாதார வளாகத்தில் சிறுநீர் கழிக்கச் சென்றிருக்கிறார். அப்போது அப்பாதுரை என்ற 70 வயது முதியவர் அந்த சிறுமியை பாலியல் ரீதியாக துன்புறுத்தி வன்முறை செய்திருக்கிறார்.

மாணவியின் கூச்சலை அடுத்து அவரை மீட்ட அக்கம்பக்கத்தினர் அப்பாதுரையைப் பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். பின்னர் அந்த முதியவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் அடைக்கப்பட்ட அப்பாதுரையிடம் போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment