உயர்நீதிமன்ற மதுரை கிளை,கூட்டுறவு சங்கத் தேர்தலை முறைப்படி நடத்த உத்தரவிடக் கோரிய வழக்கை மே இரண்டாவது வாரத்துக்கு ஒத்திவைத்துள்ளது.
கூட்டுறவு சங்கத் தேர்தல்களில் எதிர்கட்சியினரின் மனுக்கள் காரணமின்றி நிராகரிக்கப்பட்டு ஒருதலைப்பட்சமாக வெற்றி அறிவிக்கப்படுவதாகத் தொடரப்பட்ட வழக்கில் தேர்தல்களுக்கு தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் இந்த வழக்கு மீண்டும் இன்று விசாரணைக்கு வந்தபோது கூட்டுறவு சங்க தேர்தலை நடத்தலாம் ஆனால் முடிவுகளை வெளியிடக்கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து விசாரணையை மே இரண்டாவது வாரத்துக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.