காலியான கடையில் கடை திறப்பு விழாவிற்கு சென்ற MLA..!!

காரைக்குடியில் புதிய நியாயவிலைக்கடையில் பொருட்கள் எதுவும் இல்லாததால், திறப்பு விழாவுக்கு வந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ. ராமசாமி திரும்பிச் சென்றார். சூடாமணிபுரத்தில் நியாய விலைக்கடைக்கு 7 லட்சம் ரூபாய் செலவில் புதிய கட்டிடம் கட்டப்பட்டு, அதன் திறப்பு விழாவுக்கு காங்கிரஸ் சட்டமன்ற குழுத் தலைவர் ராமசாமி அழைக்கப்பட்டிருந்தார்.

விழாவுக்கு வந்த அவர், நியாயவிலைக் கடையில் பொருட்கள் எதுவும் இல்லாததை கண்டு ஆத்திரமடைந்தார். மேலும், அதிகாரிகளும் யாரும் வராததால், அதிருப்தி அடைந்த அவர், புதிய நியாயவிலைக்கடை திறப்பு விழாவை புறக்கணித்து, புறப்பட்டுச் சென்றார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், அரசின் மெத்தனப் போக்கால் நிதி வீணடிக்கப்படுவதாக குற்றஞ்சாட்டினார்.

மேலும் செய்த்களுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்

author avatar
kavitha

Leave a Comment