ஒரு நாளைக்கு ரூ.300000 வரை சம்பாதிக்கலாம் ..!வாட்ஸ் அப் மூலம் நடிகைகள் பாலியல் தொழிலுக்கு அழைப்பு!

வாட்ஸ் அப் மூலம் நடிகைகள் சிலரை பாலியல் தொழிலில் ஈடுபட வைக்க முயற்சி செய்த கும்பலை சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Jaya Lakshmi

ஜெயலட்சுமி என்பவர் சென்னை அண்ணா நகரை சேர்ந்தவர் ஆவார்.இவர் சின்னத்திரையிலும் நாடகங்களிலும் நடித்து வருகின்றார்.கடந்த சில வாரங்களுக்கு முன் இவருக்கு வாட்ஸ் ஆப் மூலம்  டேட்டிங் சர்வீஸ்,ரிலேஷன்ஷிப் என்று குறுஞ்செய்தி வந்துள்ளது.

அந்த குறுஞ்செய்தியில் ரூ.30,000 முதல் ரூ.300000 வரை ஒருநாளைக்கு  சம்பாதிக்கலாம் என்றும் இது உங்களுக்கு தேவை என்றால் போன் செய்யவும் என்று அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டது.இந்த செய்தியை தொடர்ந்து இவர் அளித்த புகாரின் பெயரில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment