இன்று இ-சேவை மையங்கள் செயல்படாது! தமிழக அரசு அறிவிப்பு

தமிழக அரசு, பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று   காலை முதல் மாலை வரை இ- சேவை மையங்கள் இயங்காது என தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு மின் ஆளுமை முகமையின் கீழ் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் மூலம் அரசு இ-சேவை மையங்கள் செயல்பட்டு வருகின்றன. தமிழகளவில் மொத்தம் 10 ஆயிரத்து 423 அரசு இ-சேவை மையங்கள் இயங்கி வருகின்றன. இந்நிலையில் இன்று  பராமரிப்பு பணி காரணமாக காலை முதல் மாலை வரை இ-சேவை மையங்கள் இயங்காது என தெரிவிக்கபடுகின்றது” என்று கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment