இனி வரும் தேர்தலில் ஓட்டுக்கு 1லட்சம்..!தினகரன் பகீர் தகவல்

அதிமுக  வருகின்ற தேர்தலில் ஓட்டுக்கு 1 லட்சம் கொடுத்தாலும் டெபாசிட் வாங்காது என்று அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணைச் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் திண்டுக்கல்லில் கூறுகையில்,தீவிர சிகிச்சை பிரிவில் தற்போது அதிமுக அரசு ஆயுட்காலத்தை நீடிப்பதற்க்காக  இருந்து வருகிறது.

பெருப்பான்மையை நிருபிக்க சட்டமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்தினால் ஸீலீப்பர் செல்கள் வெளியே வருவார்கள். தமிழகத்தில் முட்டையில் மட்டும் அல்ல அனைத்துதுறைகளிலும் ஊழல் நடைபெற்று வருகிற.து

அம்மா மக்கள் முன்னேற்றகழகம் வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் 37 தொகுதிகளிலும்  வெற்றிபெறும். அதேபோல் சட்டமன்ற தேர்தலில் 200தொகுதிகளை கைப்பற்றுவோம். மத்தியில் யார் பிரதமர் என தீர்மானிக்கும் கட்சியாக அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் அமையும்.

மத்திய அரசு தமிழகத்தில் ஊழல் ஆட்சி நடைபெற்று வரும் என கூறும் நிலையில் ஏன் ஆட்சி தொடர அவர்களுக்கு அனுமதிக்கிறது. தமிழகத்தில் திராவிட கட்சிகள் தவிர வேறு யாரும் ஆட்சி அமைக்கமுடியாது என  அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணைச் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment