ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு சென்ற வழியில் ஏர் பைப் பிஸ்டல் !போலீசார் விசாரணை……..

போலீசார், திருப்பதியில் வழிபாடு நடத்துவதற்காக ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு சென்ற வழியில் ஏர் பைப் பிஸ்டல் கண்டெடுக்கப்பட்டது குறித்து  விசாரணை நடத்தி வருகின்றனர்.

முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு இன்று குடும்பத்துடன் ஏழுமலையான் கோவிலில் வழிபாடு நடத்தினார். இதற்காக அவர்  நேற்று மாலை தனி விமானம் மூலம் திருப்பதி வந்து அலிபிரி மலைப்பாதை மூலம் கோவில் வந்தடைந்தார்.

இந்த நிலையில் இவர் வந்த மலைப் பாதையில் நேற்று காலை ஏர் பைப் பிஸ்டல் ஒன்றை துப்புரவு ஊழியர் கண்டெடுத்து தேவஸ்தான பாதுகாப்பு அலுவலகத்தில் ஒப்படைத்தார். இதைக் கொண்டு வந்தவர் யார்? எதற்காக கொண்டு வரப்பட்டது என்பது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment