அரசு மருத்துவர்கள் வேலைநிறுத்தத்தை கைவிட வேண்டும் …! அமைச்சர் விஜயபாஸ்கர்

அரசு மருத்துவர்கள் வேலைநிறுத்தத்தை கைவிட வேண்டும் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அமைச்சர் விஜயபாஸ்கர் கூறுகையில்,கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள நேரத்தில் மக்களுக்கு மருத்துவர்கள் சேவையாற்ற வேண்டும். அரசு மருத்துவர்களின் கோரிக்கைகளை அரசு பரிசீலிக்கும்.புயல் நிவாரண பணிகளில் தமிழக அரசு முழு வீச்சில் ஈடுபட்டுள்ளதால், அரசு மருத்துவர்கள் வேலைநிறுத்தத்தை கைவிட வேண்டும்.புதுக்கோட்டையில் மின் இணைப்பு பாதிக்கப்பட்ட 4,562 கிராமங்களில் 3,635 கிராமங்களுக்கு மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

Leave a Comment