370வது பிரிவை கொண்டுவருவதற்கு எதிர்க்கட்சிகளுக்கு துணிவிருக்கிறதா?- பிரதமர் மோடி சவால்

ஜம்மு-காஷ்மீர்,லடாக்  இந்தியாவின் கிரீடம் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிராவில் பிரச்சார கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார்.அப்பொழுது அவர் பேசுகையில், 370வது பிரிவை கொண்டுவருவோம் என எதிர்க்கட்சியினர் தங்கள் தேர்தல்அறிக்கையில் தெரிவிக்க துணிவிருக்கிறதா? என்று கேள்வி எழுப்பினார்.காஷ்மீருக்குமீண்டும் சிறப்புஅந்தஸ்து கொண்டுவர நாட்டுமக்கள் அனுமதிப்பார்களா? என்று தெரிவித்தார்.
மேலும் ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் பகுதிகள் இந்தியாவிற்கு சொந்தமான நிலம் மட்டுமல்ல அவை இந்தியாவின் கிரீடம்  என்றும் கூறினார்.