கருணாநிதி சிலையை திறந்து வைத்தார் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி

முன்னாள் திமுக தலைவர் கருணாநிதியின் முதலாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.கருணாநியின் நினைவு  தினத்தையொட்டி இன்று  காலை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதி ஊர்வலம் நடை பெற்றது.

மேலும் இன்று முக்கிய தலைவர்கள் பலரும்  மெரினாவில் உள்ள கருணாநிதியின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்கள்.

இதனையடுத்து இன்று மாலை  முரசொலி அலுவலகத்தில் கருணாநிதியின் சிலை திறப்பு விழா நடைபெற்றது .இந்த விழாவில் மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி  ,புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி,திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி,கவிஞர் வைரமுத்து ஆகியோர் பங்கேற்றார்கள்.இதில் மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி  கருணாநிதியின் சிலையை திறந்து வைத்தார்.