அத்திவரதர் விஐபி தரிசன வரிசையில் மின்கசிவு -பக்தர்கள் காயம்!

காஞ்சிபுரம் வரதராஜர் பெருமாள் கோவிலில் உள்ள வசந்த மண்டபத்தில் அத்திவரதர் கடத்த 1-தேதி முதல் நின்ற கோலத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்து வருகிறார்.மேலும் அத்திவரதர் வருகின்ற 17-ம் தேதி வரை காட்சியளிப்பார்.

இதனால் மக்கள் கூட்டம் அதிகரித்து உள்ளது.மேலும்  13, 14, 16 ஆகிய தேதிகளில் காஞ்சிபுரம் நகர பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.அத்திவரதரை தரிசனம் செய்ய இரண்டு வழிகள் உள்ளது.

ஓன்று பொது தரிசனம் ,மற்றோன்று விஐபி தரிசனம்.இந்நிலையில் இன்று விஐபி தரிசனத்தின் கூடாரத்தில் மின்கசிவு ஏற்பட்டது.இந்த மின்கசிவில் சில பக்தர்கள் காயம் அடைந்தனர். அவர்களுக்கு மருத்துவ சிகிக்சை கொடுக்கப்பட்டது.மற்றபடி இந்த வித பிரச்சனையும் இல்லை என தகவல் வெளியாகி உள்ளது.

author avatar
murugan