கஜா புயல் தொடர்பாக பிரதமர், உள்துறை அமைச்சரை நேரடியாக சந்தித்து நிவாரண உதவி கேட்டு கோரிக்கை வைப்போம் என்று மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக கரூரில் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை கூறுகையில், முதலமைச்சரும்,துணை முதலமைச்சரும் கஜா புயலின் சேத மதிப்பினை கணக்கெடுத்து சொல்வார்கள்.அமைச்சர் தங்கமணியிடம் சாய்ந்த மின்கம்பங்களை சரி செய்ய பேசி இருக்கிறேன்.கஜா புயல் தொடர்பாக பிரதமர், உள்துறை அமைச்சர் மற்றும் துறை அமைச்சர்களை நேரடியாக சந்தித்து நிவாரண உதவி கேட்டு கோரிக்கை வைப்போம் என்றும் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.