சீன அதிபர் வருகை ! முதல்வர் பழனிசாமி இன்று மாலை ஆய்வு

சீன அதிபர் வருகை குறித்த இறுதிக்கட்ட ஏற்பாடுகளை நேரில் ஆய்வு செய்ய மாலை   மாமல்லபுரம் செல்கிறார் முதலமைச்சர் பழனிசாமி.
தமிழகத்தில் உள்ள மாமல்லபுரத்தில் அக்டோபர் 11-ஆம் தேதி  சீன அதிபர் ஜின்பிங்கும்-இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர் .இதற்காக பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.பாதுகாப்பு பணிகள் அனைத்தும் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் ஏற்கனவே முதலமைச்சர் பழனிசாமி பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்த நிலையில், இறுதிக்கட்ட ஏற்பாடுகளை நேரில் ஆய்வு செய்ய மாலை  மாமல்லபுரம் செல்கிறார் முதலமைச்சர் பழனிசாமி.