வரும் 2019ம் உலக கோப்பை போட்டி வரையிலானது இந்திய அணியில் தோணி நீடிக்க வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் வீரர் சேவாக் தெரிவித்துள்ளார்.
மகேந்திர சிங் தோனி இந்திய அணியின் விக்கெட் கிப்பர். அதிரடி பேட்ஸ்மானாக அறிமுகமாகி பின்பு கேப்டனாக இருந்து இந்தியாவுக்கு 2-ம் உலகக்கோப்பையை வென்றுகொடுத்தவர். இவருக்கு இந்தியாவெங்கும் தீவிரமான ரசிகர்கள் உள்ளனர்.
இந்நிலையில் மகேந்திர சிங் தோனி தொடர்பாக இந்திய அணியின் முன்னாள் வீரர் சேவாக் கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில், வரும் 2019ம் உலக கோப்பை போட்டி வரையிலானது இந்திய அணியில் தோணி நீடிக்க வேண்டும்.இந்திய அணி கோப்பையை வெல்ல நிச்சயம் தோனியின் பங்களிப்பு தேவை என்ற ஷேவாக், இது தனது தனிப்பட்ட கருத்து எனவும் கூறினார்.