இனி வீடு தேடி வரும் மணல்..!புதியத்திட்டத்தை அறிமுகப்படுத்தும் பொதுப்பணித்துறை…!

2019 ஜனவரி முதல் இல்லத்திற்கே சென்று மணல் வழங்கும் திட்டம் அறிமுகம் செய்யப்படவுள்ளது என்று பொதுப்பணித்துறை தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக பொதுப்பணித்துறை கூறுகையில் ,2019 ஜனவரி முதல் இல்லத்திற்கே சென்று மணல் வழங்கும் திட்டம் அறிமுகம் செய்யப்படவுள்ளது.வெளிநாட்டு மணல் இறக்குமதி செய்யப்பட்டு மணல் வாங்குவோரின் வீடுகளுக்கே சென்று வழங்கப்படும். முதற்கட்டமாக எண்ணூர், தூத்துக்குடியில் 100 கி.மீ சுற்றளவில் வீடுகளுக்கே சென்று மணல் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது என்று பொதுப்பணித்துறை தெரிவித்துள்ளது.

Leave a Comment