குவாரிகளில் மணல் அள்ள ஒப்பந்த அனுமதி தரக்கூடாது… மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவு!

madurai high court branch

Madurai High Court : குவாரிகளில் மணல் அள்ள தனியார் நிறுவனங்களுக்கு ஒப்பந்த அனுமதி வழங்கக்கூடாது என்று உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டது. Read More – தொடரும் இழுபறி.. இன்னும் ஓரிரு நாட்களில் இறுதி முடிவு.! தமிழக காங்கிரஸ் திட்டவட்டம்.! ராமநாதபுரம் திருவாடனை தாலுகாவில் உள்ள பாம்பார் ஆற்றில் மணல் அள்ள தடை விதிக்கக்கோரி அம்மாவட்டத்தை சேர்ந்த சமாதானம் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு பொதுநல வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார். அதாவது, பாம்பார் ஆற்றில் … Read more

“வெளிச்சந்தையில் ஒரு யூனிட் மணல் விலை இவ்வளவா?…திமுக அரசே,கட்டுப்படுத்த நடவடிக்கை எடு” – ஓபிஎஸ் வலியுறுத்தல்!

கட்டுமானத்திற்கு தேவைப்படும் முக்கியப் பொருளான மணல் விலையை திமுக அரசு கட்டுப்படுத்த வேண்டும் என்று ஓபிஎஸ் வலியுறுத்தியுள்ளார். வெளிச்சந்தையில் விற்பனை செய்யப்படும் மணலின் விலையை ஓரளவுக்குக் கட்டுக்குள் கொண்டு வர முதல்வர் ஸ்டாலின் அவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் வலியுறுத்தியுள்ளார்.இது தொடர்பாக தனது அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது: “கட்டுமானப் பொருள்களில் மிக முக்கியமானதாக விளங்கும் சிமெண்ட், கம்பி, செங்கல்,மணல்,மரம் போன்ற பொருள்களை அத்தியாவசியப் பொருட்களின் பட்டியலில் கொண்டு வந்து பொதுமக்களுக்கு நியாயமான விலையில் … Read more

#Breaking:ஒரு யூனிட் மணலின் விலை ரூ.1000 – தமிழக அரசு அதிரடி உத்தரவு!

ஒரு யூனிட் ஆற்று மணலின் விலையை ரூ.1000 ஆக நிர்ணயம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. பொதுமக்கள்,ஏழை,எளியோர் எளிதாக இணைய வழியாக மணலுக்கான விலையினை செலுத்தி எவ்வித சிரமமும் இன்றி மணலை எடுத்துச் செல்லும் வகையில்,தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் நேற்று அறிக்கை வெளியிட்டார்.அதில்,”பொதுமக்கள்,ஏழை எளியோர் புதிதாக வீடுகட்டுதல், பழுதுபார்த்தல் கட்டடமற்ற எவ்வித இதரபணிகளை மற்றும் எவ்வித சிரமமுமின்றி மேற்கொள்ளுவதற்கு,இன்றியமையாத கட்டுமானப் பொருளான ஆற்று மணலை எளிதில் பெறுவதற்காக எளிமையான புதிய வழிமுறைகளை செயல்படுத்த தமிழ்நாடு முதலமைச்சர் … Read more

2 கிலோ மணலை திருடிய சுற்றுலாப்பயணிக்கு ரூ.86,000 அபராதம்.!

மத்திய தரைக்கடலில் இரண்டாவது பெரிய தீவு சார்டினியா. இத்தாலிக்குள் இந்தத் தீவு 24,090 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் விரிந்து உள்ளது. இந்நிலையில், சார்டினியா அதிகாரிகள் ஒரு பிரெஞ்சு சுற்றுலாப்பயணியிடம் இருந்து இரண்டு கிலோமணலை மீட்டுள்ளார். இதைத்தெடர்ந்து, ரூ.86,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. பிராந்தியத்தில் கடலோர பாதுகாப்புக்கு பொறுப்பான உள்ளூர் அதிகாரிகள் எல்மாஸ் விமான நிலையத்தில் பெயரிடப்படாத நபரிடமிருந்து ஒரு பிளாஸ்டிக் பாட்டிலில் இருந்து சார்டினியா தீவின் மணலை பறிமுதல் செய்தனர். இத்தாலிய தீவின் வெள்ளை மணல், கடற்கரைகள் … Read more

இனி வீடு தேடி வரும் மணல்..!புதியத்திட்டத்தை அறிமுகப்படுத்தும் பொதுப்பணித்துறை…!

2019 ஜனவரி முதல் இல்லத்திற்கே சென்று மணல் வழங்கும் திட்டம் அறிமுகம் செய்யப்படவுள்ளது என்று பொதுப்பணித்துறை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பொதுப்பணித்துறை கூறுகையில் ,2019 ஜனவரி முதல் இல்லத்திற்கே சென்று மணல் வழங்கும் திட்டம் அறிமுகம் செய்யப்படவுள்ளது.வெளிநாட்டு மணல் இறக்குமதி செய்யப்பட்டு மணல் வாங்குவோரின் வீடுகளுக்கே சென்று வழங்கப்படும். முதற்கட்டமாக எண்ணூர், தூத்துக்குடியில் 100 கி.மீ சுற்றளவில் வீடுகளுக்கே சென்று மணல் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது என்று பொதுப்பணித்துறை தெரிவித்துள்ளது.

கடல் மணல் கடத்தல்……..தடுத்த அதிகாரியை மிரட்டிய கும்பல்…….அஞ்சாத பெண் அதிகாரி அதிரடி அசத்தல்…!!!!

மணல் கடத்தலை தடுத்து நிறுத்திய பெண் அதிகாரியை மிரட்டிய மணல் கடத்தல் கும்பலை சேர்ந்த நபர்களை அஞ்சாமல் மடக்கி பிடித்துள்ளார். இந்நிலையில் இந்த மணல் கொள்ளை நாகையை அடுத்த நாகூர் கடற்கரையில், கடல் மணல் கடத்தப்படுவதாக கனிமவளத்துறை அதிகாரிகளுக்கு தொடர்ந்து புகார்கள் குவிந்த வண்ணம் வந்துது. இதையடுத்து அந்த புகாரின் அடிப்படையில் அங்கு விரைந்த கனிமவளத்துறை அதிகாரிகளை கண்டதும், கடத்தல்காரர்கள் தப்ப முயன்றனர்.ஆனால்அவர்களை தடுத்த கனிமவளத்துறை இயக்குனர் , மணல் ஏற்றிவந்த 3 டிராக்டர்களை மடக்கி பிடித்தனர். … Read more

“மணல் கொள்ளை”வாகனத்துக்கு மரணடி அடி…!!உயர்நீதிமன்ற கிளை அதிரடி..!!

மணல் திருட்டு குறித்து பொதுநல மனு மீது உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மணல் திருட்டில் ஈடுபட்டு பிடிபட்ட வாகனங்களை பறிமுதல் செய்யவேண்டும். மேலும் வாகன உரிமையாளர்கள் அபராத தொகையை செலுத்தினாலும் அவர்களிடம் மணல் திருட்டில் ஈடுபட்ட வாகனத்தை ஒப்படைக்ககூடாது. ஆனால் மாட்டு வண்டிகள் பிடிபட்டால், மாடுகளை மட்டும் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கலாம்.வண்டிகளை ஒப்படைக்க கூடாது என்று காட்டமாக தெரிவித்தது மேலும் இது குறித்து உள்துறை செயலர் மற்றும் மாவட்ட ஆட்சியாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. DINASUVADU

மணல் கடத்திவந்த லாரி பிடிபட்டது..

பாபநாசம் அடுத்த கபிஸ்தலம் அருகே தட்டுமால் காவிரி படுகை பகுதியில் பாபநாசம் தாசில்தார் மாணிக்கராஜ், விஏஓக்கள் சிவப்பிரகாஷ், கனகராஜ் உள்ளிட்டவர்கள் ரோந்து சென்றுகொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த லாரியை மறித்து சோதனையில் ஈடுபட்டனர். இதில் அரசின் அனுமதியின்றி மணல் எடுத்து வந்தது தெரியவந்தது. உடனே லாரி டிரைவர் அங்கிருந்து ஓடிவிட்டார்.லாரியை அதிகாரிகள் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டனர்.

மணல் கடத்தி வந்த லாரி பிடிபட்டது..,

கருங்கல்:போலீசார் நேற்று காலை குமரி மாவட்ட மணல் கடத்தல் தடுப்பு பிரிவு சப் இன்ஸ்பெக்டர் திலீபன் தலைமையில் தனிப்படை   கருங்கல் கருமாவிளை பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த டிப்பர் லாரியை மறித்து சோதனையிட  முயன்றனர். உடனடியாக லாரியில் இருந்து டிரைவர், கிளீனர் இருவரும் இறங்கி தப்பியோட முயன்றனர். தனிப்படையினர் 2 பேரையும் மடக்கி  பிடித்தனர். லாரியில், ஆற்று மணல் இருந்தது தெரியவந்தது. ஆவணங்களை சோதனையிட்ட போது திருச்சி மாவட்ட அரசு குவாரியில் இருந்து … Read more

மலேசியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட 58,000 டன் மணல் தூத்துக்குடியிலிருந்து மங்களூருவுக்கு மாற்றம் ஏன்…??

மலேசியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட 58,000 டன் மணல் தூத்துக்குடியிலிருந்து கேரளா மாநிலம் மங்களூருவுக்கு கொண்டுச் செல்லப்பட்டது. மணல் இறக்குமதிக்கு புதிய கட்டுப்பாடுகள் விதித்து தமிழக அரசு,இதனை தொடர்ந்து நேற்று அரசாணை வெளியிட்ட நிலையில் இறக்குமதி செய்யப்பட்ட மணலானது மங்களூருவுக்கு இடமாற்றம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.