தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக செயல்பட்டு வருகிறது – முதலமைச்சர் பழனிச்சாமி

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக செயல்பட்டு வருகிறது என்று முதலமைச்சர் பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

எழும்பூரில் நடக்கும் குடியரசுத் தலைவர், முதலமைச்சர் பதக்கம் வழங்கும் விழா நடைபெற்றது.அதில் பேசிய முதலமைச்சர் பழனிச்சாமி,மக்களை காக்கும் காவல்துறையினரின் பணி மகத்தானது காவலர்கள் உடல்நலன், மன திடத்தை மேம்படுத்த பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன. சட்டம், ஒழுங்கில் சிறப்பாக செயல்படும் மாநிலம் தமிழகம் என விருது பெற்றிருக்கிறோம். ஊர்க்காவல் படையினரும் காவல்துறையினருக்கு பெரிதும் உதவி வருகின்றனர்.மேலும் 2 காவல் அங்காடிகள் திறக்கப்பட உள்ளன.தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக செயல்பட்டு வருகிறது.காவலர்களின் உடல் நலன் மற்றும் மன திடத்தை மேம்படுத்த பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன என்று முதலமைச்சர் பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

Leave a Comment