டெண்டர் முறைகேடு வழக்கு ! அமைச்சர் வேலுமணிக்கு இறுதி கெடு விதித்த உயர்நீதிமன்றம்

டெண்டர் முறைகேடு தொடர்பான வழக்கில் பதிலளிக்க அமைச்சர் வேலுமணிக்கு இறுதி கெடு விதித்துள்ளது சென்னை உயர்நீதிமன்றம்.
உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது அறப்போர் இயக்கம் மற்றும் திமுக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தது.அதில், அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அவருக்கு வேண்டியவர்களுக்கு மட்டுமே டெண்டர்களை ஒதுக்கி அரசுக்கு இழப்பு ஏற்படுத்தவதாக தெரிவிக்கப்பட்டது.
இந்த வழக்கின் விசாரணை இன்று நடைப்பெற்றது.அதில்,  உள்ளாட்சித்துறை டெண்டர் தொடர்பான வழக்கில் பதிலளிக்க அமைச்சர் வேலுமணிக்கு இறுதி கெடு விதித்துள்ளது சென்னை உயர்நீதிமன்றம்.நவம்பர் 1-ஆம்  தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்ய வேலுமணி தரப்புக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.