அமைச்சர் துரைக்கண்ணுக்கு நெஞ்சுவலி..!நாடித்துடிப்பு குறைந்த நிலையில் அனுமதி!

வேளாண்மை துறை அமைச்சர் துரைக்கண்ணு திடீரென மூச்சுத்திணறல் மற்றும் நெஞ்சுவலி ஏற்பட்டு நாடித்துடிப்பு குறைந்த நிலையில் விழுப்புரம் அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சேலம் மாவட்டம் எடப்பாடி, சிலுவம்பாளையத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் தவுசாயம்மாள் மறைவிற்கு இறுதி அஞ்சலி செலுத்த சென்னையிலிருந்து  தனது காரில் வேளாண்மை துறை அமைச்சர்  துரைக்கண்ணு புறப்பட்டு சென்றார். இந்நிலையில் பாதி வழியிலேயே  அமைச்சர் துரைக்கண்ணுவிற்கு  (72) நேற்று காலை 10.45 மணியளவில் திடீரென மூச்சுத்திணறல் மற்றும் நெஞ்சுவலி … Read more

கோவில்பட்டி கிளை சிறையில் இருந்த கைதி மருத்துவமனையில் அனுமதி.!

கோவில்பட்டி கிளை சிறையில் அடைக்கப்பட்டிருந்த மேலும் ஒரு விசாரணை கைதிக்கு உடல்நலக்குறைவு  ஏற்பட்டுள்ளது. இவர் சாத்தான்குளம் பகுதியை சேர்ந்த ராஜாசிங் என்ற விசாரணை கைதி, விசாரணை கைதிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதை தொடர்ந்து கோவில்பட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதற்கு முன், சாத்தான்குளத்தை சார்ந்த ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் கோவில்பட்டி சிறையில்  உயிரிழந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

விருமாண்டி நடிகர் தென்னவன் மருத்துவமனையில் அனுமதி…!

பிரபல குணச்சித்திர நடிகர் தென்னவன் தமிழ் சினிமாவில் “என்னுயிர்த்தோழன்” திரைப்படம் அறிமுகமானவர்.அதன் பின்னர் விருமாண்டி , ஜெமினி மற்றும் சண்டக்கோழி போன்ற திரைப்படங்களில் நடித்து உள்ளார். இந்நிலையில் தென்னவனுக்கு திடீர்ரென உடல்நிலை பாதிக்கப்பட்டு பொத்தேரியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதித்து உள்ளனர்.மருத்துவனையில் அனுமத்திக் கப்பட்டு உள்ள தென்னவனுக்கு தீவிர சிகிக்சை அளிக்கப்பட்டு வருகிறது.