பேனர் விழுந்து சுபஸ்ரீ உயிரிழந்த விவகாரம் ! 4 பேர் கைது

பேனர் விழுந்து சுபஸ்ரீ உயிரிழந்த சம்பவம் தொடர்பாக மேலும் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சென்னையில் பேனர் விழுந்ததில் சுபஸ்ரீ என்ற இளம்பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.இந்த விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.ஆனால் சுபஸ்ரீ மரணத்திற்கு காரணமான அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.ஆனால் அவரை கைது செய்யவில்லை.சுபஸ்ரீ தொடர்பான வழக்கில் உயர்நீதிமன்றம் ஜெயகோபாலை கைது செய்யாமல் இருப்பதற்கு கடும் கண்டனம் தெரிவித்தது.இதன் பின்னர் நீண்ட நாட்களாக தலைமறைவாக இருந்த ஜெயகோபாலை கண்டுபிடிக்க முடியவில்லை.

இதனை தொடர்ந்து தலைமறைவாக  இருந்த ஜெயகோபாலை  தீவிரமாக தேடி வந்த நிலையில் ஓசூர் அருகே தனிப்படை போலீசார் நேற்று  கைது செய்தனர்.இந்த நிலையில் பேனர் விழுந்து சுபஸ்ரீ உயிரிழந்த சம்பவம் தொடர்பாக மேலும் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.இது தொடர்பாக பழனி(50), சுப்பிரமணி(50) சங்கர்(35), லட்சுமிகாந்த்(38) ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.இவர்கள் 4 பேரும் பேனரை வைத்ததாக கைது செய்யப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிடிபட்ட ஜெயகோபாலிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் கைது என தகவல் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.4 பேரை கைது செய்து பள்ளிக்கரணை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.