பெட்ரோல்,டீசல் விலையை வந்ததும் சரிசெய்ய முடியாது..!தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன்

பெட்ரோல்,டீசல் விலையை வந்ததும் சரிசெய்ய முடியாது என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ள போதிலும் இந்தியாவில் மட்டும் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படாமல் அதிகரித்த வண்ணம் இருக்கிறது.இந்த விலையேற்றம் வாகன ஓட்டிகளை தொடர்ந்து அவதிப்பட வைத்து வருகிறது.

இந்நிலையில் பெட்ரோல் ,டீசல் விலை குறித்து தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில்,  ஜிஎஸ்டிக்குள் பெட்ரோல், டீசல் விலையை கொண்டுவர மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.60 ஆண்டுகளாக நிர்வாக சீர்கேடு உள்ளது, வந்ததும் சரிசெய்ய முடியாது என்றும் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

Leave a Comment