மக்களுக்கு எதையும் செய்யாதவர்களுக்கு பாவமன்னிப்பு கிடைக்காது – முதல்வர் பழனிசாமி பேச்சு

மக்களுக்கு எதையும் செய்யாதவர்களுக்கு பாவமன்னிப்பு கிடைக்காது என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இன்று தென்காசியை புதிய மாவட்டமாக முதலமைச்சர் பழனிசாமி தொடங்கி வைத்தார்.அப்பொழுது முதமைச்சர் பழனிசாமி அரசின் திட்டங்களை விளக்கி பேசினார்.இதன் ஒரு பகுதியாக திமுக தலைவர் ஸ்டாலின் குறித்து முதலமைச்சர் பழனிசாமி பேசினார்.அப்பொழுது அவர் பேசுகையில்,  ஆட்சியில் இருந்தபோதும், இல்லாதபோதும் மக்களுக்கு எதையும் செய்யாதவர்களுக்கு பாவமன்னிப்பு கிடைக்காது.
பல்வேறு சூழ்ச்சிகளை செய்து உள்ளாட்சி தேர்தலை தடை செய்ய ஸ்டாலின் நினைக்கிறார். ஆனால் தேர்தல் ஆணையம் உள்ளாட்சி தேர்தலை நிச்சயம் நடத்தும் என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.