நவம்பர் 9ஆம் தேதி  சிறையில் உள்ள சசிகலாவை சந்தித்துவிட்டு நல்ல முடிவு எடுப்போம்…!தங்கத்தமிழ்செல்வன்

நாடாளுமன்ற தேர்தலுடன் தான் இடைத்தேர்தல் நடத்த வாய்ப்பு உள்ளது என்று  அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் கொள்கை பரப்பு செயலாளர் தங்கத்தமிழ்செல்வன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக நிலக்கோட்டையில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் கொள்கை பரப்பு செயலாளர் தங்கத்தமிழ்செல்வன்  கூறுகையில்,நாடாளுமன்ற தேர்தலுடன் தான் இடைத்தேர்தல் நடத்த வாய்ப்பு உள்ளது.கூட்டணி வந்தால் ஏற்போம், இல்லையெனில் அமமுக தனித்து நின்று 20 தொகுதிகளிலும் வெற்றி பெறும். அதேபோல்  மேல்முறையீட்டுக்கு 90 நாட்கள் உள்ளது. துணை பொதுச்செயலாளர் மேல்முறையீடு இல்லை எனக் கூறிவிட்டார்.நவம்பர் 9ஆம் தேதி  சிறையில் உள்ள சசிகலாவை சந்தித்துவிட்டு நல்ல முடிவு எடுப்போம் என்றும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் கொள்கை பரப்பு செயலாளர் தங்கத்தமிழ்செல்வன் தெரிவித்துள்ளார்.

Leave a Comment