இந்தியா முழுவதும் லட்சகணக்கில் காவலர்கள் படையில் காலி பணியிடங்கள்!

மாநிலங்களவையில் மத்திய அரசு, நாட்டில் காவலர்கள் படையில் 4 லட்சத்துக்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக உள்ளதாக  தெரிவித்துள்ளது.

இதுகுறித்த கேள்விக்கு மத்திய இணை அமைச்சர் ஹன்ஸ்ராஜ் அஹிர் அளித்த பதிலில், 19 லட்சத்து 89 ஆயிரத்து 295 காவலர்கள் படையில் பதவிகளில், கடந்த ஆண்டு ஜனவரி 1-ம் தேதி வரை 4 லட்சத்து 43 ஆயிரத்து 524 பதவிகள் காலியாக உள்ளதாகக் கூறினார்.

இது அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலும் உள்ள காலியிடங்கள் எனச் சுட்டிக்காட்டிய அவர், பணியமர்த்தும் பணிகளும் நடைபெற்று வருவதாகக் கூறினார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment