என்னையும் ஸ்டாலினையும் நிற்க வைத்து பார்த்தால் யார் ஜோக்கர் என்று தெரிந்துவிடும்-அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்

என்னையும் ஸ்டாலினையும் நிற்க வைத்து பார்த்தால் யார் ஜோக்கர் என்று தெரிந்துவிடும் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

சென்னையில் மீன்வளத்துறை  அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், ஓமக்குச்சி நரசிம்மன் போல் ஸ்டாலின் உள்ளார்.என்னையும் ஸ்டாலினையும் நிற்க வைத்து பார்த்தால் யார் ஜோக்கர் என்று தெரிந்துவிடும்.

தமிழை வைத்து வியாபாரம் செய்து பிழைக்கும் குடும்பம் திமுக தான் .திமுக ஆட்சி காலத்தில் தமிழிற்காக எதுவும் செய்யவில்லை .செம்மொழி மாநாடு ஒரு குடும்ப மாநாடு தான் அதனால் எந்த பயனும் இல்லை , தமிழுக்கு துரோகம் செய்தவர்கள் தான் திமுக,

தமிழ்நாட்டில் தமிழ் முழுமையாக மறைக்கப்படுகிறது என்று வேண்டும் என்று ஸ்டாலின் பேசுகிறார்.உலகம் உள்ள வரை தமிழ் பரவி தான் வரும், திமுக ஆட்சியால் தான் தமிழுக்கு தீங்கு ஏற்படும் .

சிதம்பரம் குறித்த கேள்விக்குஜெயகுமார் கூறுகையில், ஸ்டாலின் மேல் பல்வேறு வழக்குகள் தோண்டப்படாதது. வயிற்றில் புளியை கரைக்கிறது . முரசொலியில் என்னைப்பற்றி எழுதியதற்கு வாழ்த்துக்கள், தொடர்ந்து எழுத வேண்டும் என்று  கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்தார்.