முடிந்தது ராதாபுரம் மறுவாக்கு எண்ணிக்கை ! மு.க.ஸ்டாலினுடன் அப்பாவு திடீர் சந்திப்பு

ராதாபுரம் மறுவாக்கு எண்ணிக்கை முடிந்த நிலையில் அண்ணா அறிவாலயத்தில்  மு.க.ஸ்டாலினை அப்பாவு சந்தித்துள்ளார்.
2016 தேர்தலில் வெற்றிபெற்ற அதிமுக வேட்பாளர் இன்பதுரை வெற்றியை எதிர்த்து திமுக வேட்பாளர் அப்பாவு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் ,கடைசி மூன்று சுற்று வாக்குகளையும், தபால் வாக்குகளை மட்டும் எண்ண உத்தரவு பிறப்பித்தது.
இந்த உத்தரவுக்கு எதிராக இன்பதுரை உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.அந்த வழக்கை  விசாரித்த உச்சநீதிமன்றம், ராதாபுரம் தொகுதி மறுவாக்கு எண்ணிக்கைக்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்துவிட்டது .மேலும் வாக்கு எண்ணிக்கை முடிவுகளை அறிவிக்கக் கூடாது என்று தெரிவித்தது.
நேற்று ராதாபுரம் மறுவாக்கு எண்ணிக்கை முடிந்தது.இந்த நிலையில் இன்று  அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை அப்பாவு சந்தித்துள்ளார்.