மக்கள் பணியாற்றுவதே திமுகவின் நோக்கம்-ஸ்டாலின்

மக்கள் பணியாற்றுவதே திமுகவின் நோக்கம்  ஆகும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்  தெரிவித்துள்ளார்.

சென்னையில் நடந்த திருமண விழாவில் திமுக தலைவர் ஸ்டாலின் பேசினார்.அப்பொழுது அவர் கூறுகையில், ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் மக்கள் பணியில் இருந்து பின்வாங்க மாட்டோம்.மக்கள் பணியாற்றுவதே திமுகவின் நோக்கம்  ஆகும்.

முதல்வரின் சுற்றுப்பயத்தால் தமிழகத்திற்கு முதலீடா? அல்லது அவருக்கு முதலீடா? என தெரியவில்லை  என்று கேள்வி எழுப்பினார்.மேலும்  சட்டப்பிரிவு 370-ஐ நீக்கியது தவறு என டெல்லியில் போராடவில்லை என்றும்  கையாண்ட விதம் தவறு, முறையாக அமல்படுத்தவில்லை என்பதை சுட்டிகாட்டி போராடினோம் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசினார்.