வரி குறையும் போது அதிகமாக பேட்டரி கார்கள் பயன்பாட்டுக்கு வரும்-அமைச்சர் ஜெயக்குமார்

மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், கடந்த காலங்களில் தமிழகம் வலியுறுத்தலால், பல பொருட்களுக்கு வரி குறைக்கப்பட்டுள்ளது.மின்சாரத்தில் இயங்கும் கார்களை ஊக்குவிப்பதற்காக, அதன் மீதான ஜிஎஸ்டி வரியை குறைக்க வேண்டும்.

மின்சாரத்தில் இயங்கும் கார், இந்தியாவிலேயே சென்னையில் தான் முதலில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. வரி குறையும் போது அதிகமாக பேட்டரி கார்கள் பயன்பாட்டுக்கு வரும் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.