நிரவ் மோடியின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு

நிரவ் மோடியின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு

வங்கிக்கடன் மோசடி வழக்கில் லண்டனில் உள்ள நிரவ் மோடியின் நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.
பஞ்சாப் நே‌ஷனல் வங்கியில் ரூ.13,000  கோடிக்கு மேல் கடன் வாங்கி  விட்டு  கடந்த 2018-ம் ஆண்டு  ஜனவரி மாதம் இந்தியாவை விட்டு வெளியேறி விட்டனர்.
இந்த மோசடி தொடர்பாக  நிரவ் மோடிக்கு எதிராக ரெட் கார்னர் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. நிரவ் மோடியை கைது செய்து இந்தியாவிடம் ஒப்படைக்க சர்வதேச போலீசின் உதவியை மத்திய அரசு நாடியது.
அதன்படி நிரவ் மோடிக்கு எதிராக ரெட் கார்னர் நோட்டீசை சர்வதேச போலீசாரும் பிறப்பித்தனர். இந்த வழக்கில் இங்கிலாந்தில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றம் நிரவ் மோடியை கைது செய்ய  வாரண்ட் ஒன்றை பிறப்பித்தது.இதனை தொடர்ந்து லண்டன் போலீசார் நிரவ் மோடியை கைது செய்தது.வங்கி கடன் மோசடியில் சிக்கி லண்டன் சிறையில் உள்ளார்.

இந்நிலையில்   நிரவ் மோடியின் நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. நிரவ் மோடியை ஆகஸ்ட் 22 ஆம் தேதி வரை சிறையில் அடைக்க லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது.

Join our channel google news Youtube