4 மணி நேர கடும்பனிக்கிடையே ராணுவத்தின் மெச்ச வைக்கும் செயல்..! வீரத்திற்கும்-போர் திறனுக்கும் பெயர் போனது நம் ராணுவம்-பிரதமர் பாராட்டு

  • 4 மணி நேரமாக கார்ப்பிணி பெண்ணை சுமந்து சமயத்தில் உதவி செய்த ராணுவத்தினரின் போராட்டம் தாயும்-சேயும் நலம்
  • இந்திய ராணுவம் வீரத்திற்கும் போர் திறனுக்கும் பெயர் போனது என குறிப்பிட்டு பிரதமர் பாராட்டி ட்விட்டரில் பதிவு

இந்திய ராணுவத்தின் 72வது ஆண்டு தினத்தையொட்டி பிரதமர் மோடி தனது ட்விட்டர் பதிவின் மூலம் தனது வாழ்த்துகளை ராணுவத்திற்கு தெரிவித்துள்ளார். மேலும் இந்த பதிவில் இந்திய ராணுவம் வீரத்திற்கும் போர் திறனுக்கும் பெயர் போனது என்று குறிப்பிட்டு பாராட்டு தெரிவித்தோடு மட்டுமல்லாமல் கர்ப்பிணிக்கு தக்க சமயத்தில் ராணுவம் செய்த உதவியை குறிப்பிட்டு இந்திய ராணுவத்தின் வீடியோ பதிவு ஒன்றையும்  பதிவிட்டு பாராட்டு தெரிவித்துள்ளார்.

கடும் பனிப்பொழிவுக்கு இடையே சுமார் 4 மணி நேரமாக கர்ப்பினியை தோளில் சுமந்து சென்ற ராணுவத்தைவெகுவாக பிரதமர் மோடி பாராட்டினார். தற்போது மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அப்பெண்ணிற்கு குழந்தை பிறந்துள்ளது.இந்நிலையில் தாயும்-சேயும் நலமுடன் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். இது குறித்த வீடியோவை, பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட சில மணி நேரத்தில் லட்சக்கணக்கானோர் பார்வையிட்டு தற்போது அதிகளவு பகரப்பட்டு வைரலாகி வருகிறது.

— தினச்சுவடு சார்பாக அனைவருக்கும் இனிய மாட்டுப்பொங்கல் மற்றும் வள்ளுவர் தின நல்வாழ்த்துக்கள் —

author avatar
kavitha