ஸ்டெர்லைட் வேண்டாம் : மக்கள் நீதிமய்யம் கோரிக்கை , கமல் பேட்டி ..!!

சென்னை
மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ஸ்டெர்லைட் விவகாரம் தொடர்பாக தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் மத்திய குழுவிடம் மக்கள் நீதி மய்யம் சார்பில் மனு அளிக்கப்படவுள்ளது. நான் டெல்லி செல்வாதால் அங்கு செல்லவில்லை. எனது மனம் அங்குதான் உள்ளது.  ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்பதே எங்கள் முடிவு. ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட வேண்டும்; மக்களுக்கு தீங்கு விளைவிக்கும் தொழிற்சாலை தேவையில்லை.
நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன். ஊழலை ஒழிக்க வேண்டும் என்ற நல்ல கருத்தை விஜய் தெரிவித்துள்ளார். பெட்ரோல், டீசல் விலை அதிகமாக ஏற்றப்பட்டு குறைவாக குறைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
DINASUVADU 

author avatar
Dinasuvadu desk

Leave a Comment