வைகோ  மீது சில தீய சக்திகள் குறி வைத்துள்ளார்கள்!மதிமுக  துணை பொதுசெயலாளர் மல்லை.சத்யா

வைகோ  மீது சில தீய சக்திகள் குறி வைத்துள்ளார்கள் என்று மதிமுக  துணை பொதுசெயலாளர் மல்லை.சத்யா தெரிவித்துள்ளார்.

காஞ்சிபுரத்தில் மதிமுக மேற்கு மாவட்ட பொதுஉறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் அவர் கூறுகையில்,வைகோ  மீது சில தீய சக்திகள் குறி வைத்துள்ளார்கள். காவல்துறையும், இந்திய அரசும் அவரை பாதுகாக்கும் என நாம்புவது நம்மை நாமே ஏமாற்றி கொள்வதாக அமையும். நாம் தான் நம் தலைவர்களை பாதுக்காத்திட வேண்டும். நம் தலைவர்கள் தான் நமக்கான அடையாளங்கள். நம் தலைவர்களை பாதுகாத்திட தற்கொலை தியாகத்திற்கும் நாம் தயாராக வேண்டும் என்று காஞ்சிபுரத்தில் மதிமுக துணை பொதுச்செயலாளர் மல்லை.சத்யா தெரிவித்துள்ளார்.

 

Leave a Comment