முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று நடைபெறவுள்ள நிதி ஆயோக் மாநாட்டில் பங்கேற்க டெல்லி புறப்பட்டார்!

இன்று  நடைபெறவுள்ள நிதி ஆயோக் மாநாட்டில் பங்கேற்க நேற்று இரவு டெல்லி புறப்பட்டார் முதலமைச்சர் பழனிசாமி.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி டெல்லியில் இன்று  நடைபெறும், நிதி ஆயோக் கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்பதற்காக நேற்று  இரவு  புறப்பட்டு சென்றார்.

பின்னர்  இரவு 9.35 மணிக்கு டெல்லி தமிழ்நாடு இல்லத்தை சென்றடைகிறார். தொடர்ந்து அங்கு ஓய்வெடுக்கும் அவர், ராஷ்ட்ரபதி பவன் கலாசார மையத்தில், நாளை காலை நடைபெறும் நிதி ஆயோக் கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்கிறார்.

மாலை 4 மணி அளவில் கூட்டம் நிறைவு பெற்ற பின்னர், சிறிது நேரம் ஒய்வெடுத்து இரவு 8.30 மணிக்கு டெல்லியிலிருந்து புறப்பட்டு, சென்னைக்கு திரும்புவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment