தமிழகத்தில் அதிரடி மாற்றாம் !திடீரென ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்!

ஐபிஎஸ் அதிகாரிகள் தமிழகத்தில்  அதிரடியாக மாற்றப்பட்டுள்ளனர். விஜயகுமாரி டிஐஜியாக பதவி உயர்வு பெற்று மேற்கு இணை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.

தமிழக ஐபிஎஸ் அதிகாரிகள் 5 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதில் 4 பேர் ஏடிஜிபி அளவிலான அதிகாரிகள் மற்றும் ஒருவர் பதவி உயர்வும் பெற்று இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

குற்றப்பிரிவு கூடுதல் டிஜிபி அம்ரேஷ் புஜாரி சிபிசிஐடி கூடுதல் டிஜிபியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.சிபிசிஐடி கூடுதல் டிஜிபி ஜெயந்த்முரளி லஞ்ச ஒழிப்புத்துறை கூடுதல் டிஜிபியாக மாற்றப்பட்டுள்ளார்.

லஞ்ச ஒழிப்புத்துறை கூடுதல் டிஜிபி மஞ்சுநாதா தொழில் நுட்பப்பிரிவு கூடுதல் டிஜிபியாக மாற்றப்பட்டுள்ளார்.தொழில் நுட்பப்பிரிவு கூடுதல் டிஜிபி ஆபாஷ்குமார் குற்றப்பிரிவு கூடுதல் டிஜிபியாக மாற்றப்பட்டுள்ளார்.

காவல் கட்டுப்பாட்டறை துணை ஆணையர் விஜயகுமாரி டிஐஜியாக பதவி உயர்த்தப்பட்டு சென்னை கிழக்கு மண்டல இணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.மேற்கண்ட உத்தரவை உள்துறைச் செயலர் நிரஞ்சன் மார்டி பிறப்பித்துள்ளார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment