இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார்…பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான்…!!

இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் கூறியுள்ளார்.
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் இன்று செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது. “நாட்டுக்கு வெளியே நடைபெறும் பயங்கரவாதத்துக்கு பாகிஸ்தான் எல்லையை பயன்படுத்த அனுமதிப்பதில் எங்களுக்கு விருப்பம் இல்லை. பாகிஸ்தான் மக்களின் மனநிலை மாறிவிட்டது. பாகிஸ்தான் மக்கள் இந்தியாவுடன் அமைதியாக இருக்கவே விரும்புகிறார்கள்.காஷ்மீர் பிரச்சினையை தீர்க்க முடியுமா? என்று கேட்டதற்கு, “முடியாதது எதுவும் இல்லை. எந்த பிரச்சினை குறித்தும் பேசுவதற்கு நான் தயார். காஷ்மீர் பிரச்சினைக்கு ராணுவம் மூலம் தீர்வுகாண முடியாது என்று தெரிவித்த  பாகிஸ்தான் பிரதமர் , இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்பு கிடைத்தால் நான் மகிழ்ச்சி அடைவேன்”என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தெரிவித்துள்ளார்.
dinasuvadu.com
author avatar
Dinasuvadu desk

Leave a Comment