” யோகா செய்தால் பிரதமர் ஆகலாம் ” பாபா ராம் தேவ் கருத்து…!!

  • பாராளுமன்ற தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் ஆட்சியமைக்க தேசிய மற்றும் மாநில கட்சிகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன.
  • யோகா செய்தால் பிரதமராக வரலாம் என்று பதஞ்சலி பாபா ராம் தேவ் தெரிவித்துள்ளார்.

பதஞ்சலி’ நிறுவனத்தின் உரிமையாளர் பாபா ராம் தேவ், சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள ராய்ப்பூரில் செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்தார்.அப்போது அவர் கூறுகையில் ,யோகா பயிற்சி செய்வது சாதாரணமான ஓன்று அல்ல, யோகா பயிற்சி செய்பவர்கள் வாழ்வில் ராஜயோகத்தை அடைய முடியும்.நேரு , இந்திரா காந்தி , பிரதமர் மோடி, ஆகியோர் யோக செய்தார்கள் அவர்களுக்கு ராஜயோகம் கிடைத்தது.

மேலும் அவர் கூறுவகையில் பிரதமர் மோடி, ஒரு சாதாரண தேநீர் வியாபாரியின் மகனான மோடி பிரதமராக உயர்ந்தற்கு யோகாதான் காரணம். உ.பி முதல்வர்  ஆதித்யநாத் யோகா செய்து  முதல்வராகி இருக்கிறார்” என்று பட்டியலிட்டார். தற்போது ராகுல் காந்தி கூட தற்போது யோகா பயிற்சி மேற்கொண்டு வருவதாக அவர் தெரிவித்தார்.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment