பணப்பட்டுவாடா செய்த அதிமுகவினரை விரட்டியடித்த நாம் தமிழர் கட்சியினர்…!

வாக்காளர்களுக்கு டோக்கன் வழங்கிய, அதிமுகவினரை விரட்டியடித்த நாம் தமிழர் கட்சியினர். 

தமிழகத்தில் ஏப்.6ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதனையடுத்து, அனைத்து கட்சிகளும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். தேர்தலில் பணப்பட்டுவாடாவை தவிர்க்க, தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் விருதுநகர் மாவட்டம், ராஜப்பாளையம் அருகில்  உள்ள, புனல்வேலி கிராமத்தில், அதிமுகவினர் வீடு வீடாக சென்று வாக்காளர்களுக்கு டோக்கன் வழங்கியுள்ளனர். அப்போது அந்த வழியாக பரப்புரை செய்த நாம் தமிழர் காட்சி வேட்பாளர் உள்ளிட்டோர் அதிமுகவினரை விரட்டியடித்தனர்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.