தேர்தலுக்காக மட்டும் வந்துசெல்பவர்கள் அல்ல நாங்கள்-மு.க.ஸ்டாலின்

பணப்பட்டுவாடா புகார் காரணமாக வேலூர் மக்களவை தொகுதி தேர்தல் ரத்து செய்யப்படுவதாக தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டது.பின் வேலூர் மக்களவை தொகுதிக்கு ஆகஸ்ட் 5 ம் தேதி வாக்குபதிவு நடைபெறுகிறது.

வேலூர் மக்களவை  தொகுதி திமுக வேட்பாளராக கதிர் ஆனந்த் மீண்டும் போட்டியிடுகிறார்.   திமுக வேட்பாளரை ஆதரித்து மூன்று நாட்கள் பிரச்சாரம் மேற்கொண்டார்  திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.நேற்று  வேலூர் உமராபாத் பகுதியில் ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டார்.அப்பொழுது அவர் கூறுகையில்,ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் இதுவரை ஒருமுறை கூட துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் ஆஜராகவில்லை.

தேர்தலுக்காக மட்டும் வந்துசெல்பவர்கள் அல்ல நாங்கள். 8 ஆண்டுகளாக ஆட்சியில் இல்லை என்றாலும் மக்களுக்காக போராடி வருகிறோம். திமுக கூட்டணியில் 38 பேர் வெற்றிபெற்று நாடாளுமன்றத்தை கலக்குகிறார்கள் என்று பேசினார்.