இயக்குனர் அட்லீ இயக்கத்தில், தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் பிகில். இந்த திரைப்படம் பெண்கள் கால்பந்தாட்ட விளையாட்டை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படம் நேற்று ரிலீசாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ரூள்ளது.
நேற்று படம் ரிலீசான பின் தமிழ்நாட்டில், சில இடங்களில் விஜய் ரசிகர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். போலீசார் வன்முறையில் ஈடுபட்டவர்களை விரட்டியடித்த நிலையில், இலங்கையில், ஜாஃப்னாவில் உள்ள திரையரங்கு ஒன்றில், டிக்கெட் கிடைக்காத விரக்தியில், விஜய் ரசிகர்கள் தியேட்டரை சூறையாடியுள்ளனர். மேலும், திரையரங்கின் ஸ்கிரீனை அடித்து நொறுக்கி அட்டூழியம் செய்துள்ளனர். இதனையடுத்து போலீசார் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.