வேலூரில் வாக்குச்சாவடிக்குள் புகுந்து சிசிடிவி கேமிரா, மடிக்கணினிகள் திருட்டு! மர்ம நபர்கள் கைவரிசை!

வேலூரில் நாளை மக்களவை தேர்த நடைபெற உள்ளது. இதில் அதிமுக சார்பில் ஏ.சி.சண்முகம், திமுக சார்பில் கதிர் ஆனந்த், நாம் தமிழர் கட்சி சார்பில் தீபலட்சுமி என மொத்தம் 28 வேட்பாளர்கள் களமிறங்கியுள்ளனர். டிடிவி தினகரனின் அமமுக, கமல்ஹாசனின் மக்கள்  நீதி மய்யம் கட்சிகள் சார்பில் யாரும் போட்டியிடவில்லை.

தேர்தல் நடைபெறுவதால் வேலூர் முழுவதும் போலீஸ் பறக்கும் படையினர் தீவீர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த நேரத்தில் தான் குடியாத்தம் அரசு தொடக்க பள்ளியில் உள்ள வாக்கு சாவடியில் இருந்த சிசிடிவி கேமிராக்கள், 11 மடிக்கணினிகள் ஆகியவை காணாமல் போயுள்ளன. இந்த திருட்டு சம்பவத்தை நிகழ்த்திய மர்ம நபர்களை போலீசார் தீவிரமாக விசாரித்து வருகிறது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.